செய்திப் பெட்டகம் ஊடகச் செய்தித் திரட்டி

செய்திப் பெட்டகம்

செய்திப் பெட்டகம் NEWS BOX

↑ Grab this Headline Animator

29.03.2011 ஊடகச் செய்திகளின் தொகுப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ,வருகைக்கு நன்றி.
இறுதிப் போட்டிக்கு முன்னேற இலங்கை-நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை
மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் இலங்கை அணி முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் பலப் பரீட்சை நடத்தவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்த போட்டியில் இரு அணிகளும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எதிர்பார்ப்புடன் விளையாடவுள்ளன.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் முன் "பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனா"க நடித்த ஜனாதிபதி
வடபகுதிக்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படாதது ஏன் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளரைக் கடிந்து கொண்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கு அந்தஸ்திருந்தும் இன்றுவரை அதனை அமுல்படுத்த நடவடிக்கை இல்லை:நல்லிணக்க ஆணைக்குழு முன் ஹென்றி மகேந்திரன்!
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு இதுவரை உரிய மதிப்பு வழங்கப்படவில்லை. அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் அரச கரும மொழியென்று எழுதப்படவில்லை.
விட்டுக்கொடுப்புடன் மனந்திறந்து பேசினால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணலாம் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வடபகுதியில் விரைவில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமது கட்சி தனித்து அல்லது மற்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து “அபிவிருத்தியும் அதிகாரப் பகிர்வும்” என்ற தொனிப்பொருளில் போட்டியிட விரும்புகிறது
சூதாட்டக்காரர்களை மடக்கிப்பிடிக்க கொழும்பில் இன்டர்போல் அதிகாரிகள்!
உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. கொழும்பு கெத்தாராம ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறினார்.
31ம் திகதி சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை
தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்று எதிர்வரும் 31ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒலுவிலில் சகல வசதிகளையும் கொண்ட நீதிமன்றம் மற்றும் பொலிஸ் நிலையம் நிர்மாணிக்க நடவடிக்கை!
ஒலுவிலில் சகல வசதிகளையும் கொண்ட நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படுமென நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பஸ்களில் மிதிபலகை பயணத்துக்கு தடை
பஸ்களில் மிதிபலகையில் பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் மிதிபலகையில் நின்று கொண்டு மக்கள் பயணம் செய்வதற்கு இடமளிக்கும் இலங்கை போக்குவரத்து சபை தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போலந்து நாட்டு கார் தொழிற்சாலையை கையகப்படுத்த டாடா முயற்சி?
போலந்து நாட்டை சேர்ந்த கார் தொழிற்சாலையை கையகப்படுத்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. tatafsoஉலக அளவில் கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கவும், வர்த்தகத்தை பரப்பும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றை முன்நகர்த்துவதற்கு அமெரிக்கா பிரதான பாத்திரமொன்றை வகிக்க விரும்பியது - நிருபமா சுப்பிரமணியன்
ஸ்ரீலங்கா இந்தியாவிடம் தான் அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்குள் தமிழர் பகுதிகளில் ஒரு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவதாகச் சொன்னது. ஆனால் இந்திய அதிகாரிகள் தனிப்பட்ட வகையில் அந்த உறுதிமொழியில் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தார்கள். அமெரிக்க தூதுரகத்தின் பல தந்திகளை விக்கிலிக்ஸ் மூலமாக த ஹிந்துவுக்கு காணக் கிடைத்ததன் பேறாக வெளிப்பட்டது.
வட பகுதியின் நிலைமையைப் பார்த்து கவலையடைந்த அயன் போத்தம்
கிரிக்கெட் விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் சேர் அயன் போத்தம் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

0 comments:

Post a Comment