செய்திப் பெட்டகம் ஊடகச் செய்தித் திரட்டி

செய்திப் பெட்டகம்

செய்திப் பெட்டகம் NEWS BOX

↑ Grab this Headline Animator

30.03.2011 ஊடகச் செய்தித் திரட்டு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ,வருகைக்கு நன்றி.
நியூஸிலாந்து அணியை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.5 ஓவர்களில் 217 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை பந்துவீச்சாளர்களில் அஜந்த மெண்டிஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் லசித் மாலிங்க 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் முத்தையா முரளிதரன் ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
யாழ் மாவட்டம் அதிசயிக்கத்தக்க வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனான சந்திப்பில் நோர்வே தூதுவர்
யாழ் மாவட்டம் அதிசயிக்கத்தக்க வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரல்ட்ஸ்ரட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானி​யாவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படு​ம் தமிழர்கள் - ஒன்பது பேர் உண்ணாநிலைப் போராட்டம் ! மூவர் தற்கொலை முயற்சி!!
பிரித்தானியாவில் வதிவிட அனுமதி நிராகிரக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதையால் பாதிக்கப்பட்ட யாழ். கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வைத்தியசாலையில்!
பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட யாழ்.கோப்பாய் கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் 10 பேர் சிகிச்கைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயத்தை முழுமையாக கைவிடும் பரிதாப நிலையில் மட்டு மாவட்ட விவசாயிகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை அரசாங்கத்தால் எதுவித நட்ட ஈடுகளும் வழங்கப்படாத நிலையில், அப்பாதிப்பில் இருந்து மீண்டு தங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள்.
அமைச்சர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் பிரபல ஹோட்டலில் அரங்கேறும் அழகிகள் விழா!
ஆளுங்கட்சி அமைச்சர்களையும், அரச உயர் அதிகாரிகளையும் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் கொழும்பில் உள்ள ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் வாராந்தம் மொடல் அழகிகளின் ‘பேஷன் ஷோ’க்களை தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை அளித்த இராணுவ நீதிபதிகளிடம் குறிப்பு இல்லை
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை அளித்த இராணுவ நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையின் போது எழுத்து மூலக் குறிப்புகள் எதனையும் வைத்திருக்க வில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஆர்ப்பாட்டம் உக்கிரம் : அமைச்சரவை ராஜினாமா
சிரியாவில் அரசுக்கெதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சரவை பதவி விலகியுள்ளது. இதனை அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல்- அஸாட் உறுதிபடுத்தியுள்ளார்.
தொழில்நுட்ப கற்கை நெறிகளை பூர்த்தி செய்யாதோர் இறுதிப் பரீட்சைக்குத் தோற்ற வாய்ப்பு
இலங்கை உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் ஒன்பது கற்கை நெறிக்கு 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தெரிவு செய்யப்பட்டு கற்கை நெறியை பூர்த்தி செய்யாத மாணவர்கள் தமது கற்கை நெறியை பூர்த்தி செய்து இறுதிப்பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் வாய்ப்பை வழங்கியுள்ளது.
கறுப்புக் கண்ணாடி அணிந்து கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
மார்ச் மாத இறுதி முதல் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களின் போது சூரியன் இலங்கைக்கு நேராக இருப்ப தனால் உஷ்ண நிலை உச்ச கட்டத்தில் இருக்கின்றது. இதனால் வியர் குரு போன்ற சரும நோய்கள் அதிகமாக ஏற்படுவதுடன் மக்களின் கண்பார் வைக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்து கின்றது. கொழும்பு கண் ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே பகல் பொழுதில் கடும் வெயிலில் வெளியில் செல்ப வர்கள் கறுப்புக் கண்ணாடி அணிவது அவசியமென்று அறிவுறுத்துகிறார். சூரிய கதிர்களில் இருந்து வெளியேறும் அதி சக்தி வாய்ந்த புறஊதாகதிர் கண்விழிகளுக்கு தீங்கிழைக்கும் என்றும் இதனால் பார்வை மங்குதல், கண்களில் பூ விழுதல் போன்ற பலதரப் பட்ட நோய்கள் மக்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்து இருக்கிறதென்று அவர் தெரிவிக்கின்றார். இவ்விதம் தொடர்ந்தும் பல நாட்களுக்கு கடும் வெயிலில் கண்ணாடி இல்லாதவர்கள் கறுப்புக் குடையொன்றை பிடித்துக் கொண்டு செல்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. கறுப்புக் கண்ணாடி அணிய வேண்டும் என்பதற்காக நடைபாதையில் விற்பனை செய்யப்படும் தரங்குறைந்த பிளாஸ்டிக் கறுப்புக்கண்ணாடிகளை அணிவதனால் கண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமென்றும் அவர் கூறுகிறார். வைத்தியர்களின் சிபாரிசுக்கமைய தயாரிக்கப்படும் கறுப்புக் கண்ணாடிகள் கடைகளில் சற்றுக் குறைந்த விலைக்கு விற்கப்படுவதனால், பணக்கஷ்டம் உள்ளவர்கள் அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். கறுப்புக் கண்ணாடியை வாங்குவதற்கு சிறிதளவேனும் பணமில்லாதவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் பகல் பொழுதில் தங்கள் வசிப்பிடங்களில் முடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த வைத்தியர் கூறுகிறார்.
உள்ளூராட்சி சபைகளை வலுப்படுத்த சட்டதிருத்தம்: ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி
விருப்பு வாக்கு சண்டை சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளூராட்சி சபைகள் சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். எதிரணியினரின் பொய்ப் பிரசாரங்க ளையும், சேறுபூசும் நடவடிக்கைகளையும் நம்பாது நாட்டு மக்கள் தொடராக எமக்கு ஆணை வழங்கி வருகின்றார்கள்.
புதிய துணைவேந்தராக வசந்தி நேற்று நியமனம் இந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண்
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக மருத்துவ பீடபேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பதவியேற்கின்ற முதல் பெண் துணைவேந்தர் இவரே. இவரது நியமனத்தின் மூலம் இனிவரும் காலங்களில் யாழ். பல்கலைக்கழகம் கல்வி மற்றும் வளங்களில் முன்னோக்கிச் செயற்பட வேண்டும் என்று குடாநாட்டின் கற்றறிந்தோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கும் கடிதம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தால் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.யாழ்.பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. பேரவை உறுப்பினர்களின் தெரிவுப்படி பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருந்தார். பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், தற்போதைய பதில் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோர் தலா 9 வாக்குகளைப் பெற்று அடுத்த நிலையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். நடைமுறையின் பிரகாரம் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் பெயர்களை பல்கலைக்கழகப் பேரவை பரிந்துரைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்காக அனுப்பி வைத்தது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பின்னர் துணைவேந்தர் ஒருவரை ஜனாதிபதியே நியமிப்பார். மாதக்கணக்கில் இந்நியமனம் இடம்பெறாமல் இழுபறிப்பட்டு வந்தது. அதன் பின் கடந்த வருட இறுதியில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பதில் துணைவேந்தராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

0 comments:

Post a Comment