செய்திப் பெட்டகம் ஊடகச் செய்தித் திரட்டி

செய்திப் பெட்டகம்

செய்திப் பெட்டகம் NEWS BOX

↑ Grab this Headline Animator

31.03.2011 ஊடகச் செய்தித் திரட்டு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ,வருகைக்கு நன்றி.
இலங்கை அகதியொருவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை முயற்சி
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதியொருவர் தற்கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் புதிய தலைவர் மைக்கேல் கிளர்க்!
அவுஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக மைக்கேல் கிளர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகம் கால வரையின்றி மூடப்பட்டுள்ளது!
மட்டக்களப்பு பல்கலை கழக விடுதியில் தங்கி இருந்த மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் பொலிஸார் தலையிட்டு தமிழ் மாணவர்கள் 5 பேரை தாக்கியமையால் மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லண்டனில் துப்பாக்கிச் சூட்டில் 5 வயது சிறுமி உட்பட இருவர் படுகாயம்!
தெற்கு லண்டன் பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான பலசரக்கு கடை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 வயது சிறுமியும் 35 வயதுடைய கடைஉரிமையாளரும் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவில் ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படைப்படகுடன் 4 கடற்படையினர் மாயம்!
முல்லைத்தீவு கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகுடன் 4 கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
வடமராட்சியில் மக்கள் மீள் குடியமர்ந்த சில பகுதிகளில் அதிகாலை முதல் படையினர் தேடுதல்
மக்கள் அண்மையில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட உடுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் படைத்தரப்பு பெரும் எடுப்பிலான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ஆயிரக் கணக்கில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் உள்ளேயோ வெளியேயோ செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஆறு மாதத்திற்கு நீடிப்பு
கலைக்கப்படாத 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுகிறது. 2011 ஜுலை 30ஆம் திகதியுடன் பதவிக்காலம் முடிவடையும் 22 உள்ளூராட்சி சபைகளும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாவதற்கு 2011ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க அவசர நிலை சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி நிறுவனங்கள் முகாமைத்துவ கட்டளையின்கீழ் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமான அறிவித்தல் 29ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
த.ம.வி.பு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவியேற்பு
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பாக போட்டி இட்டு வெற்றி பெற்றவர்களுக்கான உத்தியோக பூர்வ பதவியேற்பு நிகழ்வு நேற்று கட்சித் தலைவர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கட்சி தலைமைய அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பபலரும் கலந்து கொண்டனர்
முன்னாள் போராளிகள் 205 பேர் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர்
புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 206 பேர் நாளை விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்
ஐ.தே.க.வை பிளவுபடுத்த எந்தவொரு நபருக்கும் இடமளியேன்: ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்திவிடலாம் என எந்தவொரு நபரும் கனவு கண்டு விடக்கூடாது. அவ்வாறு இடம் பெறுவதற்கு கட்சித் தலைவர் என்ற வகையில் எவருக்கும் நான் இடமளிக்க மாட்டேன்
13வது திருத்தத்திற்கு அப்பாலான அதிகார பரவலாக்கலை கோருமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது - மாவை சேனாதிராசா!
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகார பரவலாக்கத்தை கோருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்தியா அறிவுறுத்தியுள்ளது
ஆஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது தாக்குதல்: முகமூடி அணிந்த மர்ம மனிதர்கள் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முகமூடி அணிந்த 2 மர்ம மனிதர்கள் அந்த கோவில் மீது துப்பாக்கியால் பல முறை சுட்டனர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவில் உள்ளது நிïசவுத் வேல்ஸ் மாநிலம். இங்கு உள்ள அபுபர்ன் என்ற இடத்தில் ஸ்ரீமந்திர் என்ற பெயரில் ஒரு இந்து கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 19-ந்தேதி தாக்கப்பட்டது. அன்று இரவு முகமூடி அணிந்த 2 பேர் அந்த கோவில் மீது துப்பாக்கியால் பல முறை சுட்டனர். கோவில் வாசல் அருகே உள்ள சுவர் மீது சில குண்டுகள் தாக்கின.
வன்னி திரும்பிய முதியவர்கள் பலர் வறுமை,தனிமையால் பரிதவிப்பு உதவ நிதி இல்லையெனக் கை விரிக்கும் தொண்டர் அமைப்புக்கள்
மோதலினால் இடம்பெயர்ந்து பின்னர் வட பகுதிக்கு திரும்பிச் சென்றவர்களில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுபவர்களாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பிளேக்குடன் தமிழ் தூதுக்குழு சந்திப்பு
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு காணும் விடயம் தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகார உதவி அமைச்சர் ரொபோ்ட் பிளேக்கை உலகத் தமிழர் பேரவையின் தூதுக்குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது,
எந்த நிலை வந்தாலும் கப்பல் விளம்பரத்தை அகற்ற மாட்டோம் - கனடா கண்சவெட்டிக் கட்சி
கனடாவில் வெளியிடப்பட்ட அகதிகளை குற்றவாளிகளாகக் காட்டும் விளம்பரத்தை கனடா கண்சவெட்டிக் கட்சி அகற்ற வேண்டுமென்றும் கனடியப் பிரதமர் இந்த விளம்பரத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கனடிய தமிழ்த் தேசிய மக்களவை கண்சவெட்டிக் கட்சியை நிர்ப்பந்தித்திருந்தது.
மலேசியாவில் நெருக்கடிக்குள்ளாகும் இலங்கைத் தமிழ் அகதிகள்
மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக அறியமுடிகின்றது.

0 comments:

Post a Comment